குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம்..”சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” - அமைச்சர் மெய்யநாதன்

0 2630

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் கண்டிப்பாக அரசு வேலை வழங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நேர்மையாகவும், நியாயமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பசுமலை பட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments